நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் (06) இன்று விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே அவர் தனது ராஜினாமாவை அறிவித்தார்.
அரசாங்கக் கணக்குகள் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க இணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கு வழி வகுக்கும் வகையில் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.