கோயம்புத்தூரில் நடைபெற்ற 16-வது மாநாட்டில் சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவராக ஜி.சுகுமாறன் தேர்வு | Sukumaran elected as CITU state president at 16th convention held in Coimbatore

கோவை: கோவை​யில் நடந்த சிஐடியு தொழிற்​சங்க மாநாட்​டில் மாநிலத் தலை​வ​ராக ஜி.சுகு​மாறன், பொதுச் செய​லா​ள​ராக எஸ்​.கண்​ணன் உட்பட 41 பேர் கொண்ட புதிய நிர்​வாகி​கள் குழு தேர்வு செய்​யப்​பட்​டது. சிஐடியு தொழிற்​சங்​கத்​தின் 16-வது மாநில மாநாடு கடந்த 6-ம் தேதி கோவை​யில் தொடங்​கியது. தொடர்ந்து நடந்த பொது மாநாடு மற்​றும் பிர​தி​நி​தி​கள் மாநாட்​டில், மாநிலத் தலை​வர் அ.சவுந்​தர​ராஜன் மற்​றும் பல்​வேறு தொழிற்​சங்க நிர்​வாகி​கள் பேசினர்.

இரண்​டாம் நாள் நடந்த பிர​தி​நி​தி​கள் மாநாட்​டில், மூத்த தொழிற்​சங்​கத் தலை​வர் டி.கே.ரங்​க​ராஜன், அகில இந்​தியதுணைத் தலை​வர் ஏ.கே.பத்​ம​நாபன், விவ​சா​யிகள் சங்​கத் தலை​வர் டி.ர​வீந்​திரன், விவ​சா​யத் தொழிலா​ளர் சங்​கத் தலை​வர் எம்​.சின்​னதுரை, அகில இந்​திய செய​லா​ளர் ஆர்​.கரு​மலை​யான் ஆகியோர் பேசினர்.

மத்​திய அரசு கொண்டு வந்​துள்ள 4 தொழிலா​ளர் சட்​டத் தொகுப்​பு​களை திரும்​பப் பெற வேண்​டும். 8 மணி நேர வேலை நேரத்தை உயர்த்​தும் முயற்​சிகளைக் கைவிட வேண்​டும். அரசுத் துறை​களில் ஒப்​பந்த ஊழியர்​களை நிரந்​தரம் செய்ய வேண்​டும் என்பன உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தித் தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. மாநாடு நேற்று நிறைவடைந்த நிலை​யில், 41 பேர் கொண்ட சிஐடியு புதிய மாநில நிர்​வாகி​கள் குழு தேர்வு செய்​யப்​பட்​டது.

மாநிலத் தலை​வ​ராக ஜி. சுகு​மாறன், பொதுச் செய​லா​ள​ராக எஸ்​.கண்​ணன், பொருளாள​ராக எஸ்​.​ராஜேந்​திரன், உதவி பொதுச் செய​லா​ளர்​களாக வி.கு​மார், கே.​திருச்​செல்​வன், கே.ஆறு​முக​நா​யினர், இ.முத்​துக்​கு​மார், மாநிலத் துணைத் தலை​வர்​களாக அ.சவுந்​தர​ராசன், மாலதி சிட்​டி​பாபு, கே.​விஜயன், எம்​.சந்​திரன்​,பி.கருப்​பையன், டிஉதயகு​மார், ஏ.கிருஷ்ண​மூர்த்​தி, ஏ.ஜானகி​ராமன், எம்​.ம​காலஷ்மி, எஸ்​.கே.மகேந்​திரன் உள்​ளிட்ட 17 பேரும், செய​லா​ளர்​களாக கே.சி.கோபிகு​மார், கே.ரங்​க​ராஜ், பி.என்​.தே​வா, எஸ்​.கிருஷ்ண​மூர்த்​தி. எம்​.தனலட்​சுமி உள்​ளிட்​டோரும் தேர்வு செய்​யப்​பட்​டனர்.

தொடர்ந்​து, நேற்று மாலை நடந்த பேரணி​யில் சிஐடியு நிர்​வாகி​கள் மற்​றும் ஆயிரக்​கணக்​கான தொழிலா​ளர்​கள் பங்​கேற்​றனர். கோவை சிவானந்தா காலனி​யில் பேரணி நிறைவடைந்​தது.

பின்​னர் அங்கு நடை​பெற்ற பொதுக்​கூட்​டத்​தில் சிஐடியு அகில இந்​திய தலை​வர் கே. ஹேமல​தா, பொதுச் செய​லா​ளர் தபன்​சென், தேசிய செய​லா​ளர் ஆர்​.கரு​மலை​யான் உள்​ளிட்​டோர் பேசினர்​.சிஐடியு தொழிற்சங்க மாநில மாநாட்டு நிறைவையொட்டி கோயம்புத்தூரில் நேற்று நடைபெற்ற பேரணியில் பங்கேற்றோர்.

நன்றி

Leave a Reply