செம்மணியில் அடுத்தகட்ட அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதபுதைகுழியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை
முன்னெடுப்பது தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (22.08.2025) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன்படி எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 45 நாட்கள் வழங்கப்பட்ட நிலையில்,
32 ஆவது நாளுடன் குறித்த அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

இதன்போது, 147 என்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டதுடன், 133 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

நன்றி

Leave a Reply