செம்மணி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் !

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் நேற்று 21 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் நேற்று மேலும் 11 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 9 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 9 எலும்பு கூட்டு தொகுதியுடன் 90 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 101 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்று 21 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டதுதுடன் இன்றையதினமும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 30 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில்
இதுவரை சிறுவர்களின் பாடசாலைப் புத்தகப் பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை, காற்சங்கிலி, சிறு வளையல், இரும்புக் கட்டிகள், போத்தல், பாதணிகள், சிறுமிகளின் ஆடைகள், கற்கள், பிளாஸ்டிக் மாலை உள்ளிட்ட 46 சான்றுப்பொருள்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

நன்றி

Leave a Reply