தங்கம் விலை ரூ.81,000-ஐ தாண்டி புதிய உச்சம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.720 உயர்வு! | Gold jewellery price crosses Rs 81000 Rs 90 per pound gram

சென்னை: சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை இன்று பவுனுக்கு ரூ.720 உயர்ந்​து, ரூ.81,200-க்கு விற்​கப்​படுகிறது. தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரு​வ​தால், குடும்ப நிகழ்ச்​சிகளுக்​காக நகை வாங்க எண்​ணி​யிருந்​தோர் கடும் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர்.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில் தங்​கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதம் 26-ம் தேதி முதல், தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்​தது. குறிப்​பாக, அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும் இந்​திய பொருட்​களுக்கு 50 சதவீதம் வரி விதிப்​பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்​திய ரூபாய் மதிப்பு சரிவு உள்​ளிட்ட காரணங்​களால் தங்​கம் விலை மேலும் உயர்ந்​து, நாள்​தோறும் வரலாறு காணாத புதிய உச்​சத்தை பதிவு செய்​தது.

அந்த வகை​யில், கடந்த 6-ம் தேதி பவுன் தங்​கம் ரூ.80 ஆயிரத்தை தாண்​டி, வரலாறு காணாத புதிய உச்​சத்தை அடைந்​தது. அதன் பின்னரும் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் தொடர்ச்​சி​யாக, சென்​னை​யில் இன்று ஆபரணத் தங்​கத்​தின் விலை மேலும் உயர்ந்​து, மீண்​டும் வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது. 22 காரட் தங்கம் இன்று பவுனுக்கு ரூ.720 உயர்ந்​து, ரூ.81,200-க்கு விற்​பனை செய்யப்படுகிறது. அதேபோல இன்று ஒரு கிராம் தங்​கத்தின் விலை ரூ.90 உயர்ந்​து, ரூ.10,150-க்கு விற்​கப்​படுகிறது.

இந்த நிலையில், வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.140 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1.40 லட்​ச​மாக​வும் இருந்​தது. தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரு​வ​தால், நகை வாடிக்கையாளர்கள் கடும்​ அதிர்ச்​சி அடைந்​துள்ளனர்​.

“சர்​வ​தேச அளவில் டாலர் மதிப்​பு, தங்​கம் விலை​ உயர்ந்​திருப்​ப​தால் உள்​நாட்​டிலும் தங்​கம் விலை உயர்ந்​துள்​ளது. அதேபோல், பாதுகாப்பு கருதி தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதால், ஆபரணத் தங்கம் விலை உயரவே வாய்ப்பு உள்​ளது” என்கின்றனர் வர்த்தகர்கள்.

நன்றி

Leave a Reply