தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 மீனவர்கள் கைது!

கடந்த ஜூலை 9 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான 15 நாட்களில் கடற்பரப்பில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 65 நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களால் பயன்படுத்தப்பட்ட 16 டிங்கி படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளை, வடமேற்கு கடற்படை கட்டளை மற்றும் வடமத்திய கடற்படை கட்டளை ஆகியவற்றால் திருகோணமலை, சல்பேரு, உப்புறல், பொல்மல்குடா, நிலாவெலி, மலைமுந்தால், புத்தளம், இப்பன்தீவு மற்றும் மன்னார் வடக்கு ஆகிய கடலோர மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துதல், மின் விளக்குகளைப் பயன்படுத்துதல் மற்றும் செல்லுபடியாகும் உரிமங்கள் இல்லாமல் கடலட்டைகள் மற்றும் சிப்பிகள் கொண்டு செல்வது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 65 சந்தேக நபர்களையும், 16 டிங்கி படகுகளையும், 5 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

மேலும், கடற்படையால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி படகுகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, ஈச்சிலம்பட்டு, புத்தளம், குச்சவெளி, கோட்பே, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள மீன்வள மற்றும் நீர்வளத் துறை அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

நன்றி

Leave a Reply