தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு | Moderate rain likely at one or two places in tn today and tomorrow

சென்னை: தமிழகம், புதுச்​சேரி​யில் இன்​றும் நாளை​யும் (செப். 4 மற்​றும் 5) ஓரிரு இடங்​களில் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. 

இது தொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்​குநர் பா.செந்​தாமரைக்​கண்​ணன் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: வட தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் செப். 2-ம் தேதி (செவ்​வாய்க்​கிழமை) மழை பெய்​துள்​ளது. குறிப்​பாக, வேலூரில் 11 செ.மீ. மழை பதி​வாகி​யுள்​ளது. மேற்கு திசைக் காற்​றில் நில​வும் வேக மாறு​பாடு காரண​மாக தமிழகம், புதுச்​சேரி​யில் இன்​றும், நாளை​யும் மித​மான மழை பெய்​யக்​கூடும். அதே​போல, வரும் 6, 7-ம் தேதி​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

தமிழகம், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் நாளை வரை அதி​கபட்ச வெப்​பநிலை​யில் பெரிய மாற்​றம் இருக்​காது. சில இடங்​களி​ல் அதி​கபட்ச வெப்​பநிலை இயல்​பை​விட 2-3 டிகிரி செல்​சி​யஸ் அதி​க​மாக இருக்​கக்​கூடும்.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் லேசான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. அதி​கபட்ச வெப்​பநிலை 34 டிகிரி செல்​சி​யஸ், குறைந்​த​பட்ச வெப்​பநிலை 27 டிகிரி செல்​சி​யஸ் அளவில் இருக்​கும்.

வடமேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் நில​விய காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி வலு​வடைந்து ஆழ்ந்த காற்​றழுத்​தத் தாழ்வு பகு​தி​யாக மாறி​யுள்​ளது. இது அடுத்த 24 மணி நேரத்​தில் மேற்​கு – வடமேற்கு திசை​யில் நகர்ந்து ஒடி​சாவைக் கடந்து செல்​லக்​கூடும்.

தமிழக கடலோரப் பகு​தி​கள், மன்​னார் வளை​குடா மற்​றும் குமரிக்​கடல், ஆந்​திர கடலோரப் பகு​தி​கள், தென்​கிழக்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் அடுத்த 3 நாட்​களுக்கு பலத்த சூறாவளிக் காற்று வீசும். எனவே, இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்டாம். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

நன்றி

Leave a Reply