நவம்பர் மாதம் வரை நடைபெறவுள்ள இந்த தேசிய வாய்நல ஆய்வு, நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி மேற்கொள்ளப்பட உள்ளது.
நாட்டில் ஐந்தாவது தேசிய வாய்நல ஆய்வு இன்று (10) முதல் ஆரம்பமாகவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வின் ஒரு பகுதியாக வீடுகள் மற்றும் பாடசாலைகளுக்கு வருகை தரும் மருத்துவ குழுக்களுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
நவம்பர் மாதம் வரை நடைபெறவுள்ள இந்த தேசிய வாய்நல ஆய்வு, நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் சீரற்ற முறையில் தேர்வு செய்யப்பட்ட சுமார் 10,000 பாடசாலை மாணவர்கள் மற்றும் பெரியவர்களிடமிருந்து தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?
News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.
