தேர்தல் விரோதக் கொலையில் 9 பேருக்கு ஆயுள்: கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு | 9 people get life sentence in anti-election murder case

கடலூர்: ஊ​ராட்சி மன்ற தேர்​தலின் போது நடை​பெற்ற கொலை தொடர்​பான வழக்​கில், கடலூர் நீதி​மன்​றம் 9 பேருக்கு ஆயுள் தண்​டனை விதித்து தீர்ப்​பளித்​தது.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த உள்​ளாட்​சித் தேர்​தலில். கடலூர் வட்​டம் தூக்​கணாம்​பாக்​கம் அருகே உள்ள பள்​ளிப்​பட்டு ஊராட்சி மன்ற தலை​வர் பதவிக்கு ராமச்​சந்​திரன், ரவி ஆகியோர் போட்​டி​யிட்​டனர். அதே பகு​தி​யைச் சேர்ந்த ஜனார்த்​தனன், ராமச்​சந்​திரனுக்கு ஆதர​வாக செயல்​பட்​டார். தேர்​தலில் ராமச்​சந்​திரன் வெற்றி பெற்​றார். இதனால் ராமச்​சந்​திரன் ஆதர​வாளர் ஜனார்த்​தனனுக்​கும், ரவி ஆதர​வாளர் குமார் என்​பவருக்​கும் முன்​விரோதம் உரு​வானது.

இந்​நிலை​யில் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் 14-ம் தேதி ஜனார்த்​தனன், அவரது ஆதர​வாளர் கமலக்​கண்​ணன் (40) என்​பவருடன் அதே பகு​தி​யில் பேசிக்கொண்​டிந்​தார். அப்​போது அங்கு வந்த குமாருடன் தகராறு ஏற்​பட, இருதரப்​பினரும் தாக்​கிக் கொண்​டனர். இதில் இரு தரப்​பைச் சேர்ந்த ஜனார்த்​தனன், கமலக்​கண்​ணன், சிவா, ஜெயசீலன் உட்பட 7 பேருக்கு பலத்தகாயம் ஏற்​பட்​டது. மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட கமலக்​கண்​ணன் உயி​ரிழந்​தார். இதுகுறித்து தூக்​கணாம்​பாக்​கம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தினர்.

இந்த வழக்கு கடலூர் முதலா​வது கூடு​தல் மாவட்ட அமர்வு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தநிலையில் நீதிபதி சரஸ்​வதி நேற்று தீர்ப்​பளித்​தார். இதில் குற்​றம் நிரூபிக்​கப்​பட்​ட​தால் குமார் (48), வெங்​கடேசன் (32), மணி​யரசன் (29), கிருஷ்ண​ராஜ் (53), சிலம்​பரசன் (28), வினோத்​கு​மார் (28), பார​தி​தாசன் (28), அரவிந்த் (30), பரத்​ராஜ் (30) ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்​டனை விதித்​தும், தலா ரூ.3,000 அபராதம் விதித்​தும் தீர்ப்​பளித்​தார்.

இந்த வழக்கு நடை​பெற்​றுக் கொண்​டிருக்​கும் போது வழக்​கில் தொடர்​புடைய சிவ​ராமன் தூக்​குப் போட்டு தற்​கொலை செய்து கொண்​டார். மேலும், இவ்​வழக்​கில் தொடர்​புடைய சிலம்​பரசன் பாகூரில் 2022-ம் ஆண்டு நடந்த கொலை வழக்​கில் ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்டு புதுச்​சேரி காலாப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். நேற்று அவர் கடலூர் நீதி​மன்​றத்​துக்கு அழைத்து வரப்​பட்​டு,பின் காலாப்பட்டு சிறை​யில்அடைக்​கப்​பட்​டார். தண்​டனை பெற்ற மற்​ற 8 பேரும்​ கடலூர்​ மத்​தி​ய சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டனர்​.

நன்றி

Leave a Reply