நாடு திரும்பிய இலங்கை பரா தடகள வீரர்கள்! – Athavan News

இந்தியாவின் புது டெல்லியில் நடைபெற்ற பரா உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் பரா தடகள வீரர்கள் குழு இன்று (7) அதிகாலை நாடு திரும்பியது.

செப்டம்பர் 27 முதல் ஒக்டோபர் 5 வரை நடைபெற்ற இந்த சாம்பியன்ஷிப்பில் 100 நாடுகளைச் சேர்ந்த 980 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கையின் நுவான் இந்திக நீளம் பாய்தலில் 6.46 மீட்டர் பாய்நது வெண்கலப் பதக்கம் வென்றார்.

அதே நேரத்தில் பிரதீப் சோமசிறி 1,500 மீட்டர் ஓட்டத்தில் மற்றொரு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இது ஒரு புதிய ஆசிய சாதனையை படைத்தது.

நாடு திரும்பிய விளையாட்டு வீரர்களை விமான நிலையத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சக அதிகாரிகள், இலங்கை பராலிம்பிக் குழுவின் பிரதிநிதிகள் வரவேற்றனர்.

நன்றி

Leave a Reply