நேபாளத்தில் வெடித்த போராட்டங்கள் காரணமாக அந்நாட்டின் பழைய ஆட்சி அகற்றப்பட்டுள்ளது.
தற்போது இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுஷிலா கார்கி பொறுப்பேற்றிருக்கிறார்.
இந்நிலையில் அவர் புதிய அமைச்சரவையை அறிவித்திருக்கிறார்.
குறிப்பாக ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளராக அறியப்பட்ட ஓம் பிரகாஷ் ஆர்யாலுக்கு சட்டத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
மொத்தம் மூன்று அமைச்சர்கள் புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.
இதில் ஓம் பிரகாஷ் ஆர்யால், உள்துறை, சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓம் பிரகாஷ் ஆர்யால் நேபாள நாட்டின் மிகவும் பிரபலமான வழக்கறிஞர் என்பதுடன் நேபாள நாட்டின் சட்ட அமைப்புகள், மனித உரிமைகள், மற்றும் ஊழல் ஒழிப்புக்கான செயற்பாட்டாளராக இவர் காணப்படுகிறார்.
நேபாள அரசியலில் சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதில் இவர் உறுதியாக இருக்கிறார்.
இதேபோல் நேபாளத்தை மின்வெட்டிலிருந்து காப்பாற்றிய முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் குல்மான் கிசிங், எரிசக்தி, உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இவரை தொடர்ந்து, புகழ் பெற்ற பொருளாதார நிபுணரான ராமேஸ்வர் கானல், நிதியமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.