பதுளை, பசறை, 10 ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
28 மற்றும் 33 வயதுடைய இரண்டு இளைஞர்கள் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
