பயணச் சீட்டு வழங்காத நடத்துனர்கள் தொடர்பில் அறியப்படுத்த புதிய தொலைபேசி இலக்கங்கள்!

பயணசீட்டுகளை  பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்று (15) மாத்திரம் 217 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

அவற்றில் பயணச் சீட்டுக்களை வழங்காத 18 நடத்துனர்களுக்கும், பயணச் சீட்டு இன்றி பயணித்த 5 பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதாக  குறிப்பிட்டுள்ளது.

மேலும்  மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளில் பயணச் சீட்டுக்களை வழங்காத நடத்துனர்கள் மற்றும் பயணச்சீட்டு இன்றி பயணிக்கும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதேநேரம் பேருந்தில் பயணிக்கும் நபர்கள் கேட்டும்  பேருந்து  நடத்துனர்  பயணச் சீட்டை வழங்கவில்லையாயின் 070 – 2860860 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு காமினி ஜாசிங்க தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக  மேலும் அவர்  தெரிவிக்கையில் ,  பயணிகள் தங்களுக்கு வழங்கப்படும் பேருந்து பயணச் சீட்டுக்களை பயணிக்கும் போது தம்வசம் வைத்திருக்காவிட்டால் 100 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும் எனவும்    அத்துடன் பயணக் கட்டணத்தை இரு மடங்காக செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply