பஹ்ரைனில் நடைபெற்று வரும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் நேற்று (25) நடைபெற்ற மகளிர் தனிநபர் கோல்ஃப் பிரிவில் இலங்கையின் காயா தலுவத்த வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இந்த விளையாட்டுத் தொடரில் தடகளம் அல்லாத ஒரு பிரிவில் இலங்கை வென்ற முதல் பதக்கம் இதுவாகும்
இதேவேளை, பஹ்ரைனில் நடைபெற்றுவரும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025 இல் இலங்கை வீரர்கள் ஈட்டி எறிதல் மற்றும் 400 மீ ஓட்டப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
மாத்தளை, யட்டவத்த, வீர பராக்ரம இரண்டாம் நிலைப் பாடசாலையின் மாணவரான சத்துர துலஞ்சன ஜயதிஸ்ஸ , 62.51 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இதேவேளை, நீர்கொழும்பு கேட்வே கல்லூரியைச் சேர்ந்த ஷானுக கோஸ்டா , 47.72 வினாடிகளில் ஓடி 400 மீட்டர் ஓட்டபோட்டியில் வெண்கலப் பதக்கத்தை இலங்கைக்குப் பெற்றுக் கொடுத்தார்.
