பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை​யான 2 கூறல் மீன்கள் ரூ.1.65 லட்சத்துக்கு விற்பனை | Two rare species of fish caught in Pamban fisherman net

ராமேசுவரம்: ​பாம்​பன் மீனவர் வலை​யில் அரிய வகை​யான கூறல் மீன்​ இரண்டு சிக்​கின. 46 கிலோ எடை கொண்ட இந்த மீன்​கள் ரூ.1.65 லட்​சத்​துக்கு விற்​பனை​யாகின. ராம​நாத​புரம் மாவட்​டம், பாம்​பனில் மன்​னார் வளை​குடா பகு​தியி​லிருந்து நேற்று முன்​தினம் 90-க்​கும் மேற்​பட்ட விசைப் படகு​களில் மீனவர்​கள் கடலுக்​குச் சென்​றனர். இவர்​கள் மீன்​பிடித்து விட்டு நேற்று கரை திரும்​பினர்.

இதில் மீனவர் ஒருவரின் வலை​யில் 22 மற்​றும் 24 கிலோ எடையி​லான 2 கூறல் மீன்​கள் சிக்​கி​யிருந்​தது தெரிய​வந்​தது. மொத்​தம் 46 கிலோ எடை கொண்ட இந்த மீன்​கள் கிலோ ரூ.3,600 வீதம் ரூ.1,65,600-க்கு ஏலத்​தில் விலை​போ​யின.

கூறல் மீனின் வயிற்றுப் பகுதியில்

இருந்து எடுக்கப்பட்ட நெட்டி.

இதுகுறித்து பாம்​பன் மீனவர்​கள் கூறும்​போது, “கூறல் மீனை உணவுக்​காகப் பயன்​படுத்​து​வ​தில்​லை. கூறல் மீனின் வயிற்​றுப் பகு​தி​யில் காற்​றுப்பை ரப்​பர் டியூப் போன்ற வடிவத்​தில் (பிஷ் மாவ்​ஸ்) நெட்டி காணப்​படும்.

இந்த நெட்​டியை பீர், ஒயின் போன்ற மது​பானங்​கள் மற்​றும் ஜெல்லி மிட்​டாய் போன்​றவை​களை சுவை​யாக​வும், கெட்​டுப் போகாமல் இருக்​க​வும் பயன்​படுத்​துகின்​றனர். கிழக்கு ஆசிய நாடு​களில் இந்த நெட்​டிகளைக் கொண்டு விலை உயர்ந்த சூப் தயாரிக்​கப்​படு​கிறது” என்​றனர்.

நன்றி

Leave a Reply