பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு – Oruvan.com

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

மஹர நீதவான் நீதிமன்றில் அவர் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி, செப்டெம்பர் 22 ஆம் திகதி வரை பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply