நாங்கள் மிக அன்புடன் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் வேலை செய்கின்றோம், அவர் எமக்கு அரசியலில் கிடைத்த பெரும் சொத்தாகும். எமது அரசாங்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது. சஜித், நாமல் ஆகியோர் அழுது கொண்டு இருக்க வேண்டியதுதான், குறித்த 5 வருடங்களை சரியாக ஆட்சி செய்தபின் மீண்டும் ஆட்சியை நாம் பிடிப்போம். ஆதலால் மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கேட்ட கேள்விக்கு காலம் கடத்தாமல் பதிலளிக்கும் முகமாகவே முதலில் வழங்கிய தகவல்களை குறிப்பிட தீர்மானித்தோம். அப்போது கூட அவர், என்னிடம் கேட்டார் தகவல்கள் சரியானவையா என்று..? அரசாங்க நிறுவனங்களில் சிலர் இன்னும் இருக்கிறார்கள் ராஜபக்சர்களுடன் இணைந்து திருட்டில் ஈடுபட்டவர்கள். அவர்கள் தகவல்களில் அடங்கியுள்ள எண்களில் மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள், குறித்த தகவல்களை தயாரித்து அனுப்பியவரே சொல்லியிருக்க கூடும். பதில் வந்துவிட்டு கேட்குமாறு, அதன் பிறகு தான் மஹிந்த சமரசிங்க அதில் இருந்த பிழைகளை சுட்டிக்காட்டினார், இவை சாதாரண விடயமாகும். 2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் விலாசம் இல்லாமல் இருந்த சஜித்-ரணில் ஆட்சி கிடைக்குமா என எதிர்பார்த்து, சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்கள்
(பிமல் ரத்நாயக்க)