இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சர்வதேச குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது விமானம் பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ் நாடுகள் மீது பறந்துள்ளமை பெரும் பேசுபொருளாகியுள்ளது. இஸ்ரேலில் இருந்து அமெரிக்காவுக்கு பறந்த நெத்தன்யாகு, மேற்குறித்த நாடுகளது வான்பரப்பை பயன்படுத்தியமை விமான ரேடார் தரவுகளில் பதிவாகியுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் (ICC) போர்க்குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நெத்தன்யாகுவின் விமானத்தை இந்த வான்பரப்புகளில் பறக்கவிடப்பட்டமை கண்டனத்தை தூண்டியுள்ளது. ICC எனப்படும் இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மொத்தமாக 120 நாடுகள் அங்கம் […]
