புதிய செயற்கைக்கோள் ஒன்றை இன்று விண்ணில் ஏவிய இஸ்ரோ!

இந்தியாவின் தகவல் தொடர்பு துறையில் முக்கிய முன்னேற்றமாக, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் — இஸ்ரோ, புதிய செயற்கைக்கோள் ஒன்றை இன்று விண்ணில் ஏவியுள்ளது.

ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட சிஎம்எஸ்-3 செயற்கைக்கோள், இந்தியாவின் தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து, எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் இன்று மாலை 5 மணி 26 நிமிடங்களுக்கு விண்ணில் ஏவப்பட்டது.

இதற்கான 24 மணிநேர கவுன்டவுன் நேற்று மாலை தொடங்கியது.

இதற்குமுன், இந்த திட்டம் வெற்றியடைய வேண்டி, இஸ்ரோ தலைவர் நாராயணன் தலைமையில் விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

அத்துடன், சிஎம்எஸ்-3 செயற்கைக்கோளின் மாதிரியை ஏழுமலையான் திருவடிகளில் சமர்ப்பித்து வேண்டியதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply