புத்தளத்தில் காணாமற் போன மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
புத்தளம் – மதுரங்குளி கடல் பகுதியில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கரையொதுங்கிய சடலம், சிலாபம் பகுதியில் இருந்து கடந்த 19 ஆம் திகதி கடலுக்குச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
37 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.