பெருந்தொகை போதைப் பொருள் கடத்தி வந்த கனேடிய நாட்டவர் கைது

பெருந்தொகை போதைப் பொருளை கடத்தி வந்த கனேடிய நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

182.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற கனேடிய பிரஜை ஒருவர் இன்று அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 21 வயதான கனேடிய நாட்டவர் என்றும், அவர் உயர்கல்வி பயிலும் மாணவர் என்றும் கூறப்படுகிறது. அவர் துபாயிலிருந்து நள்ளிரவில் தனியார் விமானம் ஒன்றில் வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர் கொண்டுவந்த பொருட்களை ஆய்வு செய்தபோது, ​​சுங்க அதிகாரிகள் 18 கிலோகிராம் 253 கிராம் ஹாஷிஷ் போதைப் பொருளை கண்டுபிடித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட போதைப் பொருளும்கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.

நன்றி

Leave a Reply