இரத்தினபுரியில் பேருந்தில் பயணித்த பெண் மருத்துவர் 32 வயதான மதுபாஷினி அதிலிருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பேருந்து பெல்மடுல்லவை அடைந்ததும், பேருந்தில் இருந்து இறங்குவதற்காக முன் கதவிற்கு நடந்து சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மருத்துவமனையில் 13 நாட்கள் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். அவர் ஒரு குழந்தையின் தாய்.
விபத்து தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 19 ஆம் திகதி பிற்பகல் இந்த விபத்து சம்பவித்துள்ளது.