மகிந்தவின் மகன் அனுப்பிய ரொக்கெட் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்

மகிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்சவின் மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் “சும்ரீம் சாட் செயற்கைக்கோள் திட்டத்திற்கு” இலங்கை அரசாங்கம் எந்தப் பணத்தையும் செலவிடவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்திலிருந்து இலங்கைக்கு பல மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் இன்று (6) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாகவே பிரதமர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட பிரதமர் ஹரிணி, “சுப்ரீம் குளோபலின் துணை நிறுவனமான சுப்ரீம் சாட் 2011/2012 ஆம் ஆண்டில் ஏவிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளில் முதலீடு செய்யப்பட்ட தொகை குறித்த கேள்வியின் படி, சுப்ரீம் சாட் 2012.05.23 அன்று இலங்கை முதலீட்டு சபையுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

2013/2014 ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் தகவல் தொடர்பு செயற்கைக்கோளுக்காக ஒரு கோடியே 21 லட்சத்து நான்காயிரத்து தொல்லாயிரத்து முப்பத்தாறு ரூபாயை முதலீடு செய்துள்ளது.

அத்துடன், நிறுவனம் சமர்ப்பித்த முதலீட்டு விண்ணப்பத்தில் உள்ள தகவலின்படி, அந்த திட்டத்திற்காக இலங்கை அரசு எந்த பணத்தையும் முதலீடு செய்யவில்லை,” என தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply