மக்கள் எரிபொருளைப் சேமிக்கத் தொடங்கினால் மீண்டும் QR அறிமுகம்

மக்கள் எரிபொருளைப் சேமிக்கத் தொடங்கினால் மட்டுமே மீண்டும் QR குறியீடு (QR code) முறை அறிமுகப்படுத்தப்படும் என்று எரிசக்தி பிரதி அமைச்சர்  முஹம்மது அர்க்காம் தெரிவித்துள்ளார்.


நாட்டில் தற்போது போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. இலங்கையில் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது.


தேவையற்ற அச்சம் காரணமாக மக்கள் தங்களுக்குத் தேவையானதை விட அதிகளவு எரிபொருளைச் சேகரித்தால், அது விநியோகச் செயற்பாடுகளைப் பாதிக்கும். செயற்கையான தட்டுப்பாடுகளை உருவாக்குவதைத் தவிர்க்குமாறும், பொறுப்புடன் செயல்படுமாறும் பிரதி அமைச்சர்  மக்களை வலியுறுத்தியுள்ளார்.

நன்றி

Leave a Reply