65
யாழ்ப்பாணத்தில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமையவுள்ள காணிக்குள் இருந்து ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறன. இந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை மைதானம் அமையவுள்ள காணிகளை துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது, குழாய் ஒன்றுக்குள் இருந்து ரி – 56 ரக துப்பாக்கிகளின் ஒரு தொகை ரவைகள் காணப்பட்டன.
அதனை தொடர்ந்து, அவை தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , காவல்துறையினர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற அனுமதி பெற்று ரவைகளை மீட்க்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
