0
டெல்லி: மும்மொழிக் கொள்கையை மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மும்மொழிப் பிரச்சினை குறித்து தமிழக எம்.பி. மாணிக்கம் தாகூர் மக்களவையில் கேள்வி எழுப்பினார். மாணிக்கம் தாகூர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய கல்வித் துறை இணை அமைச்சர் எழுத்துப் பூர்வ பதிலளித்துள்ளார். மும்மொழிக் கொள்கைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஒன்றிய அரசு பின்வாங்கியுள்ளது.