மெக்சிகோவில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 07 கைதிகள் உயிரிழப்பு!

மெக்சிகோவில் சிறையில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட கலவரத்தில், 7 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன்10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மெக்சிகோ நாட்டில் வெராக்ரூஸ் (Veracruz) மாகாணத்தில் ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ள டக்ஸ்பன் (Tuxpan) சிறைச்சாலையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த குற்றக் கும்பலானது மற்றைய கைதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை மிரட்டிப் பணம் பறிந்து வந்ததாகக் கூறப்படும் கைதிகளுக்கிடையிலேயே குறித்த கலவரம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கலவரத்தின் போது, இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டதுடன் , மேலும் சில கைதிகள் சிறைச்சாலையின் உள்ளே தீ வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கலவரத்தில் 7 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் , 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த கலவரம் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

மேலும், சம்பவம் தொடர்பில் அந்த நாட்டுக் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நன்றி

Leave a Reply