53
யாழ்ப்பாணத்தில் அரச காணிகளை நீண்ட கால குத்தகைக்கு கோரிய சிலரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றை வழங்குவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போதே சில காணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் மேலதிக செயலர்கள் (காணி மற்றும் நிர்வாகம்), பிரதேச செயலாளர்கள், மாவட்ட காணி பயன்பாட்டு திட்டமிடல் உதவிப்பணிப்பாளர், மாகாண காணி ஆணையாளர் திணைக்கள அதிகாரிகள், நில அளவைகள் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#JaffnaLand #GovernmentLandLease #DistrictSecretariat #LandPolicy #JaffnaNews
