யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்களுடன் இரு இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு பகுதிகளில் வன்முறை கும்பல்களின் அட்டகாசம் அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுவதாக அப்பகுதி மக்களால் ஊர்காவற்துறை காவற்துறையினருக்கு தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அந்நிலையில் , காவற்துறையினர் புங்குடுதீவு பகுதியில் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது, கூரிய ஆயுதங்களை உடைமையில் வைத்திருந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் , அவர்களின் உடைமையில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு வாள்கள் மற்றும் கஜேந்திரா கோடரி என்பவற்றை காவல் நிலையம் எடுத்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை கைது செய்யப்பட்ட இருவருடனும் சேர்ந்து இயங்கிய சிலரை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும் , அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஊர்காவற்துறை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

________________________________________

நன்றி

Leave a Reply