யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

இலங்கை – யாழ்ப்பாண மாவட்ட சதுரங்கச் சங்கம் (JDCA) தலைமையில் மூன்றாவது யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 இன்று (டிசம்பர் 3) யாழ்ப்பாணத்தில் சிறப்பாகவும், அமைதியான சூழலிலும், யாழ் மாவட்ட சதுரங்கச் சங்கத் தலைவர் எந்திரி ந. நந்தரூபன் தலைமையில் ஆரம்பமாகியது. இப்போட்டி வரும் டிசம்பர் 7 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதோடு குறித்த போட்டிற்கு ஆதவன் தொலைக்காட்சி , ஆதவன் வானொலி, தமிழ் எப்.எம் மற்றும் ஒருவன் ஆகியன ஊடக அனுசரணை வழங்குகின்றமை சிறப்பம்சமாகும்.

blank blank

இன்றைய தொடக்க நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட சீரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ளு. அறிவழகன், கௌரவ விருந்தினராக இந்திய துணைத் தூதரக அதிகாரி திரு சங்கரன் ராஜகோபால், சிறப்பு விருந்தினராக வைத்திய கலாநிதி ளு. சிவன்சுதன் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

blank
யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு பெருமை மிக்க நிலத்தில் உலகத் தரத்திலான சதுரங்கத்தை வெளிப்படுத்தும் இந்தப் போட்டி, இலங்கை சதுரங்க வரலாற்றில் புதிய மைல்கல்லாக திகழ்கிறது. மொத்தம் ரூ. 24 இலட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுவது, இதுவரை நாட்டில் நடைபெற்ற எந்த சர்வதேச சதுரங்கப் போட்டியிலும் இல்லாத மிக உயர்ந்த பரிசாகும்.

blank

கடந்த ஆண்டுகளின் சிறப்பான சாதனையாளர்கள்

இந்தப் போட்டி முதன்முதலில் 2023 ஆம் ஆண்டு அறிமுகமானது.

முதல் JICC 2023 சாம்பியன்:  இந்தியா – நாக்பூரைச் சேர்ந்த IM Anup Deshmukh

இரண்டாவது JICC 2024 சாம்பியன்:  இந்தியா – மும்பையைச் சேர்ந்த IM Nubairshah Shaikh

தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இந்திய வீரர்கள் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியதை அடுத்து, இந்த ஆண்டும் இந்தியாவின் பல முன்னணி வீரர்கள் வருகை தந்துள்ளதால் போட்டியில் அதிக ஆவல் நிலவுகிறது.

blank blank

இந்த ஆண்டின் சிறப்பு அம்சங்கள்

இந்த ஆண்டு JICC பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவிலிருந்து 20-க்கும் மேற்பட்ட உயர்தர ரேட்டிங் வீரர்கள் பங்கேற்கின்றனர். மலேசியா, பங்களாதேஷ், செக் குடியரசு உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் போட்டியாளர்கள் இணைந்துள்ளனர். இந்த

ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவுகள்:

Mechalite and Corporate Sector

School Category (Open & Women’s)

Higher Education Sector

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளர்களுக்கு பரிசுத் தொகைகள், கோப்பைகள், பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

உள்ளூர் வீரர்களுக்கான உயர்வான வாய்ப்பு

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டியின் முக்கிய சாதனைகளில் ஒன்று, உள்ளூர் வீரர்களுக்கு FIDE Rating பெறும் வாய்ப்பை வழங்குவதாகும்.
2024 ஆம் ஆண்டில் மட்டும் 72 புதிய வீரர்கள் தங்கள் முதல் சர்வதேச ரேட்டிங்கைப் பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு மேலும் பல வீரர்கள் தங்கள் ரேட்டிங்கை மேம்படுத்தவும் அல்லது புதிதாகப் பெறவும் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

போட்டியின் பெருமை மற்றும் தாக்கம்

சாதாரண விளையாட்டு நிகழ்வைத் தாண்டி, இது யாழ்ப்பாணத்திற்கும் இலங்கைக்கும் ஒரு முக்கிய மைல்கல். சர்வதேச தரத்திலான போட்டி அனுபவத்தை நாட்டிற்கு கொண்டு வருவது உள்ளூர் திறமையாளர்களை உலக அரங்கிற்கு அறிமுகப்படுத்துவது. நாடுகளுக்கிடையேயான கலாச்சார நட்புறவை வலுப்படுத்தும் மேடையாக அமைவது. யாழ்ப்பாணம் அறிவு, பண்பாடு, சிந்தனை ஆகியவற்றின் மையமாக இருப்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில், இந்தப் போட்டி மிகுந்த சிறப்புடன் நடைபெற்று வருகிறது.

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 இலங்கை இளைஞர்களுக்கு சர்வதேச மேடையைத் திறக்கிறது. உலகத்துடன் போட்டியிடும் திறனை உருவாக்குகிறது. யாழ்ப்பாணத்தை உலக சதுரங்க வரைபடத்தில் மேலும் உயர்த்துகிறது. அடுத்த சில நாட்களில் பல அதிரடி ஆட்டங்கள் சதுரங்க ரசிகர்களை கவரும் என்பதில் ஐயமில்லை. . இப்போட்டியின் பரிசளிப்பு வைபவம் டிசம்பர் 7 ஆம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெறும்.

blank blank blank blank blank blank blank blank blank blank

நன்றி

Leave a Reply