ரணில் – SJB முன்னணி செயற்பாட்டாளர்கள் இடையே ரகசிய சந்திப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த 18ஆம் திகதி இரவு கொழும்பிலுள்ள ஒரு ஆடம்பர குடியிருப்பு வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முன்னணி செயற்பாட்டாளர்கள் சிலரை சந்தித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பிலுள்ள ஒரு குறிப்பிட்ட ஆடம்பர குடியிருப்பு வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும், இதில் எஸ்ஜேபி ஆசன அமைப்பாளர்களான வருண ராஜபக்ஷ மற்றும் சரித் அபேசிங்க ஆகிய இருவரும் கலந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது, முன்னதாக இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக எஸ்ஜேபியினரால் தொடர்ந்து முன்வைக்கப்படும் கேள்விகள் குறித்து ரணில் விக்ரமசிங்க அவர்கள் அவர்களிடம் வினவியுள்ளதாகவும், அது தொடர்பாக தன்னால் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் கேட்டறிந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, “சர், உண்மையிலேயே தலைமைப் பொறுப்பிலிருந்து விலகத் தயாராக உள்ளதாக நீங்கள் கூறியதாக சொல்கிறார்களே?” என சரித் அபேசிங்க, ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, “இந்த இரு கட்சிகளின் ஒற்றுமைக்காக எந்த நேரத்திலும் நான் விலகத் தயாராகவே இருக்கிறேன். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், இந்த இரு கட்சிகளிலும் Gen Z தலைமுறைக்கு ஏற்ற தலைவர்களை இன்னும் உருவாக்கவில்லை. அதனால் அது நடைபெறும் வரை யாருக்கும் வெற்றி பெற முடியாத நிலைதான் உள்ளது. அதற்காக நீங்கள் செயல்பட வேண்டும்” என தெரிவித்ததாக தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன.

The post ரணில் – SJB முன்னணி செயற்பாட்டாளர்கள் இடையே ரகசிய சந்திப்பு! appeared first on LNW Tamil.

நன்றி

Leave a Reply