இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக இன்று (29) ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இது கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் ஜப்பானுக்கான பிரதமர் மோடியின் பிரத்தியேகப் பயணமாக அமைந்துள்ளது.
இந்தியாவின் தேசிய நலன்களை முன்னேற்றுவது, இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவது, பிராந்திய மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை வளர்ப்பதை இந்தப் பயணம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜப்பானுக்கான இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ்,
இரு நாடுகளுக்கும் இடையிலான விவாதங்கள் இருதரப்புப் பிரச்சினைகளுக்கு அப்பால் விரிவடையும் என்றும், அமைதியான மற்றும் நிலையான இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் பன்முக மற்றும் பலதரப்பு கட்டமைப்புகளிலும் இது கவனம் செலுத்தும்.
அத்துடன், இரு தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதைத் தாண்டிச் செல்லும்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தற்போதைய வர்த்தகப் போருக்கு மத்தியில் நிலவும் புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதார நிலப்பரப்பு குறித்து இரு தலைவர்களும் ஆலோசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் வர்த்தக பதட்டங்களை இந்தியா எதிர்கொண்டு வரும் நிலையில், டோக்கியோவுடன் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்தவும், வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டிற்கான புதிய வழிகளை ஆராயவும் புது டெல்லி முயல்கிறது.
பொருளாதாரத்திற்கு அப்பால், நாகரிக இணைப்புகள், பிராந்திய பாதுகாப்பு மற்றும் உலகளாவிய நிர்வாகம் ஆகியவற்றில் ஒத்துழைப்புடன் செயல்படும் இரண்டு முக்கிய ஆசிய ஜனநாயகங்களின் மூலோபாய ஒருங்கிணைப்பை இந்தப் பயணம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த பயணம் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் மோடியின் ஜப்பானுக்கான முதல் தனித்த விஜயத்தையும், ஜப்பான் பிரதமர் இஷிபாவுடனான அவரது முதல் இருதரப்பு உச்சிமாநாட்டையும் குறிக்கிறது.
மோடி இறுதியாக 2018 இல் இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டிற்காக டோக்கியோ சென்றிருந்தார்.
2014 இல் பதவியேற்றதிலிருந்து மோடியின் எட்டாவது ஜப்பான் விஜயம் இதுவாகும்.
ஜப்பான் இந்தியாவின் ஐந்தாவது பெரிய அந்நிய நேரடி முதலீட்டு ஆதாரமாகும்.
2024 டிசம்பர் நிலவரப்படி ஒட்டுமொத்த முதலீடுகள் 43.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளன.
2023-24 இல் 3.1 பில்லியன் அமெரிக்க டொலலர்களையும், 2024-25 ஏப்ரல்-டிசம்பர் மாதங்களில் 1.36 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.