33
திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரை பகுதியில் சட்டவிரோத கட்டுமானங்களை அமைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இன்று (பெப்ரவரி 11, புதன்கிழமை) இந்த வழக்கு திருகோணமலை குற்றவியல் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிபதி இந்த பிணை உத்தரவை வழங்கினார்.
பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உட்பட 4 தேரர்கள் மற்றும் 6 பொதுமக்கள் என மொத்தம் 10 பேரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா். கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கடந்த சில வாரங்களாக திருகோணமலை டச்பே பகுதியில் சில மதக் கட்டுமானங்கள் அமைக்கப்படுவது தொடர்பாக உள்ளூர் மக்களுக்கும் குறித்த தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை காணப்பட்டது. தொல்பொருள் திணைக்களம் அல்லது நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உரிய அனுமதியின்றி இக்கட்டுமானங்கள் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டதையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கஸ்ஸப்ப தேரர் முன்னதாக கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான சர்ச்சைக்குரிய விடயங்களில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tag Words: #TrincomaleeCourt #KassapaThero #DutchBay #SriLankaLegalNews #BailGranted #TrincoNews2026 #LKA #BreakingNews
