🚨 பேஸ்புக் களியாட்டம் – போதைப்பொருள் பாவனை – NPP முக்கியஸ்தரின் மகள் கைது?

விக்டோரியா நீர்த்தேக்கப் பகுதியில் சட்டவிரோத ‘பேஸ்புக் களியாட்டம்’ ஒன்றில் ஈடுபட்ட 26 பேர் தெல்தெனியப் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தேசிய மக்கள் சக்தியை (NPP) பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி பிரதி மேயரின் மகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெல்தெனியப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட இந்தக் களியாட்டத்தின் போது, 22 ஆண்களும் 4 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

📌 கைப்பற்றப்பட்டவை:

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து,

  • போதைப்பொருட்கள்: 4,134 மில்லிகிராம் ஐஸ், 1,875 மில்லிகிராம் ஹேஷ், 2,769 மில்லிகிராம் குஷ், 390 மில்லிகிராம் கொக்கைன்

  • மற்றவை: சட்டவிரோத சிகரெட்டுகள் …உள்ளிட்ட பல போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் 18 முதல் 31 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனப் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் இன்று (டிசம்பர் 13) தெல்தெனிய நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

👉 கைது செய்யப்பட்ட 4 பெண்களுள், தேசிய மக்கள் சக்தியின் கண்டிப் பிரதி மேயர் ருவன் குமாரவின் 26 வயதான மகளும் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத களியாட்டங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

#இலங்கை #போதைப்பொருள் #பேஸ்புக்களியாட்டம் #NPP #கண்டி #விக்டோரியா #சட்டம்ஒழுங்கு #ஐஸ் #போதைக்குறைப்பு

நன்றி

Leave a Reply