12வது முடித்தவர்களுக்கு தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலை – ரூ.30,000 சம்பளம் || தேர்வு கிடையாது NABFINS Customer Service Officer Recruitment 2025

NABFINS Customer Service Officer Recruitment 2025: NABFINS என்பது தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (NABARD) துணை நிறுவனமாகும். இது சுய உதவிக் குழுக்கள் (SHGs) மற்றும் கூட்டு பொறுப்பு குழுக்கள் (JLGs) மூலம் சமூகப் பிணைப்புகளை பயன்படுத்தி, குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகிறது. தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் (NABFINS) காலியாக உள்ள பல்வேறு வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer – CSO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தமிழ்நாட்டிலேயே பணி அமர்த்தப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் 15.11.2025-க்குள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித் தகுதிகள் தேவை, எப்படி விண்ணப்பிப்பது மற்றும் வயது வரம்பு என்ன போன்ற விவரங்களை இங்கே விரிவாகக் காணலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள் நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனம்
NABARD Financial Services Limited (NABFINS)
காலியிடங்கள் பல்வேறு
பணி வாடிக்கையாளர் சேவை அதிகாரி/
Customer Service Officer (CSO)
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 15.11.2025
பணியிடம் தமிழ்நாடு – திருச்சி, மதுரை, சேலம், விழுப்புரம்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://nabfins.org/

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • வாடிக்கையாளர் சேவை அதிகாரி/Customer Service Officer (CSO) – பல்வேறு காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NABFINS வாடிக்கையாளர் சேவை அதிகாரி ஆட்சேர்ப்பு 2025-க்கான கல்வித் தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அனுபவம்: இந்தப் பதவிக்கு புதியவர்களும் (Freshers) விண்ணப்பிக்கலாம்.
  • மொழித் திறன்: விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியான தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதவும், பேசவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி வாடிக்கையாளர் சேவை அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதத்திற்குத் தோராயமாக ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.


இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.10.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.11.2025

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 30.10.2025 முதல் 15.11.2025 தேதிக்குள் https://nabfins.org/Careers/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். அல்லது விண்ணப்பம் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் (Email) முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும் மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

Region Email Addresses for Application
Salem Region rajesh.r@nabfins.org, saravanakumar.n@nabfins.org, anandan.s@nabfins.org
Madurai Region vijayan.m@nabfins.org, gothanda.ramasamy@nabfins.org
Trichy Region sathish.c@nabfins.org, sasikumar.m@nabfins.org
Villupuram Region srinivasan.c@nabfins.org, selvam.s@nabfins.org, lokesh.ks@nabfins.org (Chennai Avadi)

நன்றி

Leave a Reply