550க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் இரத்து; பயணிகள் அவதி!

இண்டிகோவின் செயல்பாட்டு நெருக்கடி இன்று (05) தொடர்ந்து நான்காவது நாளாக நீடித்தது

இது நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பரவலான குழப்பத்தைத் தூண்டியது.

ஆயிரக்கணக்கான பயணிகள் உணவு, குடிநீர், காலியான கவுண்டர்கள் மற்றும் தொலைந்த தங்களது பொதிகள் இல்லாமல் சிக்கித் தவித்தனர்.

இண்டிகோ நிறுவனம் வியாழக்கிழமை (04) 550க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை இரத்து செய்தது.

இது வழக்கமான 170–200 தினசரி இரத்துக்ளை விட மிக அதிகமாகும்.

இதனால் முக்கிய விமான நிலையங்களில் பரவலான இடையூறு ஏற்பட்டது. 

 

ImageLatest and Breaking News on NDTV

பாதிக்கப்பட்ட பெரும்பாலான வழித்தடங்கள் புனே, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஹைதராபாத் மற்றும் கோவாவுடன் இணைக்கப்பட்டுள்ளன.

விமான நிலைய வாரியாக இரத்து செய்யப்பட்ட விமானங்களில் மும்பையில் 118, பெங்களூரில் 100, ஹைதராபாத்தில் 75, கொல்கத்தாவில் 35, சென்னையில் 26 மற்றும் கோவாவில் 11 விமானங்கள் அடங்கும்.

மேலும் பல விமான நிலையங்களிலும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இந்த தாமதங்களின் தொடர்ச்சியான தாக்கத்தைக் குறைத்து இயல்புநிலையை மீட்டெடுக்க, இண்டிகோ குழுக்கள் MOCA, DGCA, BCAS, AAI மற்றும் விமான நிலைய அதிகாரிகளின் ஆதரவுடன் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன. 

வழக்கமாக ஒரு நாளைக்கு சுமார் 2,300 விமானங்களை இயக்கும் மற்றும் சரியான நேரத்தில் செயல்படுவதில் பெருமை கொள்ளும் விமான நிறுவனம், அதன் சரியான நேரத்தில் செயல்திறன் புதன்கிழமை 19.7 சதவீதமாகக் கடுமையாகக் குறைந்தது.

இது செவ்வாய்க்கிழமை 35 சதவீதமாக இருந்தது.

நன்றி

Leave a Reply