8 ஆம் வகுப்பு முடித்திருந்தால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலை – தேர்வு கிடையாது || பணியிடம்: புதுக்கோட்டை! TNCSC Pudukkottai Recruitment 2025

TNCSC Pudukkottai Recruitment 2025: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், புதுக்கோட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காலியாக உள்ள 80 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் பருவகால எழுத்தர் (Seasonal Clerk) மற்றும் பருவகால காவலர் (Seasonal Watchman) போன்ற பணியிடங்கள் அடங்கும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 03.12.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற விவரங்களை நீங்கள் இங்கே தெரிந்துகொள்ளலாம்.

Description Details
வேலை பிரிவு TN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்
TNCSC(Tamil Nadu Civil Supplies Corporation)
காலியிடங்கள் 80
பணிகள் பருவகால எழுத்தர் (Seasonal Clerk)
பருவகால காவலர் (Seasonal Watchman)
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்
கடைசி தேதி 03.12.2025
பணியிடம் புதுக்கோட்டை – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.tncsc.tn.gov.in/

தமிழ்நாடு அரசு புதுக்கோட்டை மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர் காலியிடங்கள்
பருவகால எழுத்தர் (Seasonal Clerk) 30
பருவகால காவலர் (Seasonal Watchman) 50
மொத்தம் 80

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவி பெயர் காலியிடங்கள்
பருவகால எழுத்தர் (Seasonal Clerk) அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இளங்கலை அறிவியல்/ வேளாண்மை / பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பருவகால காவலர் (Seasonal Watchman) அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • SC & SCA/ST விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • BC/BC(M)/MBC விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 34 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • OC விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்
பதவி பெயர் சம்பளம்
பருவகால எழுத்தர் (Seasonal Clerk) மாதம் Rs.5,285+ DA (Rs.5087/-) + பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி Rs.120/-
பருவகால காவலர் (Seasonal Watchman) மாதம் Rs. 5,218 + DA (Rs.5087/-) + பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி Rs.120/-

சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

தமிழ்நாடு அரசு புதுக்கோட்டை மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்


இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.11.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.12.2025

தமிழ்நாடு அரசு புதுக்கோட்டை மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க புதுக்கோட்டை மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்காணும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உரிய சான்றுகளுடன் மண்டல மேலாளர் மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கல்யாணராமபுரம் முதல் வீதி, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை 622002 என்ற முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரடியாக விண்ணப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பங்கள் 03.12.2025 மாலை 5.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பங்கள் மேற்கண்ட முகவரியில் 24.11.2025 அன்று முதல் அலுவலக வேலை நாட்களில் பெற்றுக்கொள்ளலாம்.

நன்றி

Leave a Reply