Clean Sri Lanka – நாரஹேன்பிட்டி ரயில்நிலையத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்தவகையில் செயற்படுத்தப்படும் Dream Destination வேலைத்திட்டத்தின் கீழ் நாரஹேன்பிட்டி ரயில்நிலையத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

களனிவெளிப் மார்க்கத்தின் மற்றுமொரு தனித்துவமான ரயில் நிலையமாக கருதப்படும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையமானது தொழில் திணைக்களம், போக்குவரத்துத் திணைக்களம், நில அளவைத் திணைக்களம் உள்ளிட்ட அரச, மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்வோர் அன்றாட போக்குவரத்து தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பயணிகளின் வசதிகருதி நவீனமயமாக்கல் பணிகள் தனியார் துறையின் முழுமையான அணுசரனையுடனும் செயல்படுத்தப்படுகிறது.

இன்றைய நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர, கொழும்பு பிரதி மேயர் ஹேமந்த வீரகோன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அமைச்சுக்களின் அதிகாரிகள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நன்றி

Leave a Reply