110
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இத்தாலி வழியாக அமெரிக்க அதிகாரிகள் முன்வைத்த உடனடி போர்நிறுத்தக் கோரிக்கையை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இந்த நான்கு முதல் ஐந்து நாட்கள் வரையிலான குறுகிய கால போர்நிறுத்தத் திட்டத்தை ஈரான் “முற்றாக நிராகரித்துள்ளது”. தற்போதைய நிலையில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும், இராணுவ ரீதியான பதிலடிகளே தொடரும் என்றும் ஈரான் சமிக்கைகளை வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பு, ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்துத் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றன.
மறுபுறம், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) ஊடான போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் சர்வதேச சந்தையில் எரிசக்தி விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் போர்நிறுத்தத்தை நிராகரித்துள்ளதால், வரும் நாட்களில் மோதல் மேலும் தீவிரமடையக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மறைமுக வழிகளில் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை மேற்கொண்டாலும், இரு தரப்பும் பின்வாங்கத் தயாராக இல்லாதது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

