ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஜெர்மானிய வெளிவிவகார அமைச்சருடனான தொலைபேசி உரையாடலின் போது, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் ஈரான் ‘முழுமையான அவநம்பிக்கையுடன்’ நுழைவதாகத் தெரிவித்ததாக மெஹர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
‘ஈரானிய மக்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்க தனது நாடு முழு அதிகாரத்துடன் போராடும்’ என்று கூறிய அராக்சி, இந்த நிலைப்பாட்டிற்கான காரணமாக அமெரிக்கா மீண்டும் மீண்டும் வாக்குறுதிகளை மீறியதையும் ‘ராஜதந்திர துரோகங்களையும்’ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

