அஸ்வெசும பயனாளர்களுக்கான 17,500 ரூபா கொடுப்பனவு 25,000 ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத்தை திட்டத்தை நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.
இதன்படி, அஸ்வெசும கொடுப்பனவு 17,500 ரூபாவிலிருந்து 25,000 ரூபா வரையும், 10,000 ரூபா கொடுப்பனவு 15,000 ரூபா
வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 5000 ரூபாய் கொடுப்பனவு 7500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக இந்த மாதத்தில் மேலதிகமாக 8,500 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
குறித்த கொடுப்பனவு ஏப்ரல் மாதம் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Post Views: 2
