இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் பத்து வருட இளையோர் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இது காணாமல் போன ஒரு தசாப்தத்தின் குழந்தைகளை சரிசெய்வதை தனது ஒழுக்க ரீதியான நோக்கம் என்று அவர் விவரித்துள்ளார்.
இதேவேளை, இந்த புதிய திட்டம் இளைஞர் சேவைகளை புத்துயிர் அளிப்பதற்காக 500 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்குவதாக உறுதியளிக்கிறது.
இளைஞர்கள் சமீபத்திய தலைமுறைகளில் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டவர்களாக உள்ளதாக கலாச்சார செயலாளர் லிசா நந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே ஒரு முக்கியமான திசை மாற்றம் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பழமைவாதிகள் இந்த திட்டத்தை விமர்சிப்பதுடன், தொழிற்கட்சியின் கீழ் அடுத்த தலைமுறையின் எதிர்காலம் இருண்டதாக இருக்கும் என்றும் எச்சரிக்கின்றனர்.
இதேவேளை, இந்த அரசாங்கம் தெளிவான, லட்சியமான மற்றும் செயல்படுத்தக்கூடிய திட்டத்தை அமைக்கிறது என்றும் இதன் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் தங்கள் திறமைகளை வளர்க்க வாய்ப்பு கிடைக்கும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
