ரஷ்ய மசகு எண்ணெய் வாங்குவது கணிசமாக குறைத்துள்ளதால் இந்தியாவின் வரி குறைக்கப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் பதவியேற்பு விழாவில் ட்ரம்ப் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இந்தியா உடன் ஒரு நியாயமான ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. ரஷ்ய மசகு எண்ணெய் வாங்குவது கணிசமாக குறைத்துள்ளதால் இந்தியாவின் வரி குறைக்கப்படும். ரஷ்ய எண்ணெய் காரணமாக இந்தியாவின் மீதான வரிகள் அதிகமாக உள்ளன. இந்தியாவுடன் மிகவும் வித்தியாசமான ஒப்பந்தம் செய்ய விரும்புகின்றோம்.
இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவை மேம்படுத்த காத்திருக்கின்றேன். மிக முக்கியமான சர்வதேச உறவுகளை செர்ஜியோ வலுப்படுத்துவார் என்று நாங்கள் நம்புகின்றோம். எரிசக்தி ஏற்றுமதி, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றை பாதுகாக்க உதவுவார். அமெரிக்க தொழில்கள், தொழில்நுட்பங்களில் முதலீடுகளை ஊக்குவிப்பார். என தெரிவித்துள்ளார்.
