இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தமது விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார்.
பிரதமர் நேற்று (18) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கடந்த 16 ஆம் திகதி இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நாட்டின் உயர்மட்டத் தலைவர்களுடன் சந்தித்து கலந்துரையாடினார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய புது டில்லியில் நடைபெற்ற NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் கலந்துகொண்டு, சிறப்புரை ஒன்றையும் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
