இமயமலையில் பனிச்சறுக்கல் -7 மலையேற்ற வீரர்கள் பலி

 

இந்தியா – நேபாளம் எல்லையில்  உள்ள இமயமலையில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள், மலையேற்ற வீரர்கள் மலை ஏறும் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றையதினம் (03)  நேபாளத்தின் டொலஹா மாவட்டத்திலிருந்து   உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 15   மலையின்   5 ஆயிரத்து 630 மீட்டர் உயரத்தில் உள்ள யலொங் ரி சிகரத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில்   தங்கியிருந்த போது  அந்த முகாமில் பனிச்சரிவு ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்துடன் , 4 பேர்  காணாமல் போயுள்ளனா்.

அதேவேளை, 4 வீரர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவா்களில்    3 பேர் அமெரிக்காவையும், ஒருவர் இத்தாலியையும், ஒருவர் கனடாவையும், இருவர் நேபாளத்தையும் சேர்ந்தவர்கள்  எனத் தொிவிக்கப்பட்டுள்ளது .  காணாமல் போன  4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

நன்றி

Leave a Reply