68
இந்தியா – நேபாளம் எல்லையில் உள்ள இமயமலையில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள், மலையேற்ற வீரர்கள் மலை ஏறும் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றையதினம் (03) நேபாளத்தின் டொலஹா மாவட்டத்திலிருந்து உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 15 மலையின் 5 ஆயிரத்து 630 மீட்டர் உயரத்தில் உள்ள யலொங் ரி சிகரத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் தங்கியிருந்த போது அந்த முகாமில் பனிச்சரிவு ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்துடன் , 4 பேர் காணாமல் போயுள்ளனா்.
அதேவேளை, 4 வீரர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவா்களில் 3 பேர் அமெரிக்காவையும், ஒருவர் இத்தாலியையும், ஒருவர் கனடாவையும், இருவர் நேபாளத்தையும் சேர்ந்தவர்கள் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது . காணாமல் போன 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
