
உயிர்கள் தொடர்பாக நாங்கள் அதிகபட்ச தலையீட்டை மேற்கொண்டு வருகிறோம். நாடாளுமன்றத்தில் முழுமையான அறிக்கையை சமர்ப்பிப்போம்,” என்று அவர் கூறினார்.
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) மற்றொரு ஈரான் கப்பல் இருப்பதாக அரசாங்கத்தின் தலைமை கொறடா, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (05) தெரிவித்தார்.
இலங்கை கடல் எல்லைக்குள் மற்றொரு ஈரான் கப்பல் இருப்பது அரசாங்கத்திற்குத் தெரியுமா என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது, அவர் இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதி, பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அரசாங்கம் இந்த விடயத்தை அறிந்திருப்பதாகவும், கப்பலில் உள்ள மக்கள் தொடர்பாக அரசாங்கம் அதிகபட்ச தலையீட்டை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
“அரசாங்கம் இந்த விடயத்தை அறிந்திருக்கிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவும், உயிர்களுக்கு அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தவும், பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான தலையீடுகளை நாங்கள் செய்து வருகிறோம். இந்தக் கப்பல் எங்கள் பிராந்திய நீர் எல்லையில் இல்லை. இது பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் உள்ளது. ஆனாலும், உயிர்கள் தொடர்பாக நாங்கள் அதிகபட்ச தலையீட்டை மேற்கொண்டு வருகிறோம். நாடாளுமன்றத்தில் முழுமையான அறிக்கையை சமர்ப்பிப்போம்,” என்று அவர் கூறினார்.
