இலங்கையிலிருந்து முப்பது இந்திய மீனவர்கள் இன்று (07) தாயகம் திரும்ப அழைத்து வரப்பட்டு, தற்போது சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த விவரங்களை எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் பகிர்ந்த உயர்ஸ்தானிகராலயம் அந்த மீனவர்களின் படத்தையும் பகிர்ந்துள்ளது.
மார்ச் மாத தொடக்கத்தில், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்கள் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
