53
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் நாட்டின் எரிசக்தி உலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் காலக்கெடுவை மேலும் 10 நாட்களுக்கு நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளார். ஈரான் அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று, இந்த தாக்குதல் நிறுத்தம் வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி இரவு 8 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முன்னேற்றமடைந்து வருவதாகவும், இரு தரப்பும் தீர்வு காணும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நீட்டிப்பு, பிராந்தியத்தில் பதற்றத்தை குறைக்கும் முக்கியமான அரசியல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
#Trump #Iran #AttackHalt #EnergySites #DiplomacySL #MiddleEastPeace
