சீனாவின் ஷாங்காய் – இந்தியாவின் டெல்லி இடையேயான பயணிகள் விமான சேவையை சீனா ஈஸ்டர்ன் நிறுவனம் இன்று(9) முதல் ஆரம்பித்துள்ளது.
முன்னதாக சீனா- இந்திய இடையே இடம்பெற்ற இந்த விமான சேவை கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் எதிரொலியாக நிறுத்தப்பட்ட நிலையில் அதன்பின்னர் , லடாக் எல்லைப் பிரச்சனை காரணமாக நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் எழுந்தது.
இதற்கிடையே, அமெரிக்கா உடனான பனிப்போருக்கு மத்தியில் இந்தியா-சீனா உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும், சீன ஜனாதிபதி ஷிஜின்பிங்கும் சந்தித்துப் பேசிய நிலையில் தற்போது விமானசேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொல்கத்தா-குவாங்சூ இடையிலான இண்டிகோ விமான சேவை கடந்த மாதம் தொடங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
