தங்காலையில் நேற்று (22) மீட்கப்பட்ட போதைப்பொருள் 9,888 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை என பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
3 லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 705.91 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அதில் 284.94 கிலோ ஹெரோயின், 420.976 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த 3 லொறிகளினதும் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.